அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மரணத்திற்குப் பின்" - மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

டந்த 25.09.2012 செவ்வாயன்று ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் சார்பாக உள்ளரங்கு நிகழ்ச்சி மலஸ்-ஜரீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், "மரணத்திற்குப் பின்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் அவர்கள், மண்டல - மாநில செயல்பாடுகளை விளக்கி பேசினார். ஏகத்துவ எழுச்சி முதலான தலைப்புகளில் மார்க்க விளக்க டிவிடிக்கள் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும், மலஸ் கிளை முழுவதும் தமிழ் பேசும் சகோதரர்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாநிலத் தலைமையின் துண்டுப்பிரசுரமான "யார் இவர்?" நோட்டீஸும், மார்க்க விளக்க டிவிடிக்களும், "ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்" என்ற நோட்டீஸும் வழங்கப்பட்டு வருகின்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.