அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"தொடர்ச்சியான நல்லமல்களை செய்வோம்" - ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 05.10.2012

ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 05.10.2012 வெள்ளியன்று காலை 9.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார்.  மண்டல செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“தொடர்ச்சியாக நல்லமல்களை செய்வோம்” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி மவுலவி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அதனை அடுத்து, மண்டல செயல்பாடுகளை சகோ. ஹாஜா விளக்கினார். ரியாத் மண்டலத்தின் 20 மற்றும் 21 ஆவது இரத்த தான முகாம்கள் குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டது. மேலும், புதிய இடங்களில் பயான்கள், நோட்டிஸ் விநியோகம், டிவிடிக்கள் விநியோகம் ஆகியவற்றை முடுக்கி விடுதல் குறித்து பேசப்பட்டது

கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. முன்னதாக ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. ஜூம்ஆ தொழுகைக்கு முன்னதாக கூட்டம் இனிதே முடிவுற்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.