ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் சார்பாக மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி, கடந்த 09.11.2012 வெள்ளியன்று, ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. உபயதுல்லாஹ் மவுலவி "நல்லமல்களில் ஏற்படும் அலட்சியங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல அணிச் செயலாளர் சகோ. யூனுஸ் அவர்கள். மண்டல - மாநில செய்திகளை எடுத்துரைத்தார்.
அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், ஷிஃபா பகுதியில் பணி புரியும் தமிழ் சகோதரர்களுக்கும், "மூட நம்பிக்கை", "மன அழுத்தத்திற்கு தீர்வு" ஆகிய தலைப்புகளில் டிவிடிக்களும், புகை பிடிப்பதன் கெடுதல்களை விளக்கி "புகை பிடித்தல் - ஒரு பாதகச் செயல்", "தவ்ஹீத் மாப்பிள்ளை(!?!)" என்ற துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment