அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நபிவழியில் நம் தொழுகை" - ரியாத் நியூ செனைய்யா கிளையில் தர்பியா

நியூ செனைய்யா கிளை சார்பாக, ஃபார்கோ வில்லா கேம்பில் "நபிவழியில் நம் தொழுகை" என்ற தலைப்பில் தொழுகை தர்பியா நிகழ்ச்சி, கடந்த 21.11.2012 அன்று இரவு நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சகோ. நஜ்முதீன், கிளைச் செயலாளர் சகோ. கமால் அவர்களின் ஏற்பாட்டின் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்.
ஒளு சட்டங்கள், தொழுகை நேரங்கள், கிப்லா, அதான், இகாமத், சுன்னத்தான தொழுகைகள் பற்றிய விபரங்கள், பொதுவாக ஒளுவில் ஏற்படக்கூடிய தவறுகள் முதலான விஷயங்கள் விளக்கப்பட்டன. கலந்துரையாடல் போன்று அமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டன.
மேலும், நியூ செனைய்யா கிளை சார்பாக ஆஷூரா நோன்பு என்ற நோட்டீஸ் மக்களிடம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.