அஜீசியா கிளை சார்பாக, "நபிவழியில் நம் தொழுகை" என்ற தலைப்பில் தொழுகை தர்பியா நிகழ்ச்சி, கடந்த 16.11.2012 அன்று மதியம் அஜீசியா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. கிளை பொறுப்பாளர் சகோ. நைனா முஹம்மது மற்றும் முன்னாள் கிளைத் தலைவர் சகோ. கடையநல்லூர் ஓட்டை இஸ்மாயில் நிர்வாகிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்.
ஒளு சட்டங்கள், தொழுகை நேரங்கள், கிப்லா, அதான், இகாமத், சுன்னத்தான தொழுகைகள் பற்றிய விபரங்கள், பொதுவாக ஒளுவில் ஏற்படக்கூடிய தவறுகள் முதலான விஷயங்கள் விளக்கப்பட்டன. கலந்துரையாடல் போன்று அமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டன. மண்டல செயலாளர் சகோ. நவ்லக் மண்டல மாநில செய்திகளை விளக்கினார்.
மேலும், அஜீசியா கிளை சார்பாக ‘தவ்ஹீத் மாப்பிள்ளை!?’ என்ற நோட்டீஸ் அஜீசியா பகுதியிலுள்ள தமிழ் பேசும் மக்களிடம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும், புகை பிடிப்பதன் கெடுதல்களை விளக்கி "புகை பிடித்தல் - ஒரு பாதகச் செயல் நோட்டீஸும்" அஜீசியா மக்களிடையே விநியோகிக்கப்படுகின்றது. மேலும், இ.ஓ.எ.மா. உருது டிவிடிக்களும் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment