தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் 01-03-2013 அன்று மதியம் அஸருக்குப் பின் ‘உலகம் போற்றும் மாமனிதர்’ பேச்சுப் போட்டி நடைபெற்றது. மாமனிதரின் சமுதாய வாழ்க்கை, மாமனிதரின் அரசியல் வாழ்க்கை, மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஆகிய தலைப்புகளின் கீழ் பேச அனுமதிக்கப்பட்டது.
ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மெளலவி. செய்யதலி ஃபைஸி, மெளலவி. உபைதுல்லாஹ், சகோ.முஹம்மது மாஹீன் ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து நிகழ்ச்சியை நடத்தினர். பங்கு பெற்றவர்களில் முதலிடத்தைப் பெற்ற மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதலாவது இடத்தை பிடித்த சகோ.நெய்னா முஹம்மதுவிற்கு 300 ரியால் மதிப்புள்ள பரிசும் குர்ஆன் தர்ஜூமாவும் வழங்கப்பட்டது.
இரண்டாவது இடத்தை பிடித்த சகோ.நுஸ்கிக்;கு 200 ரியால் மதிப்புள்ள பரிசும் குர்ஆன் தர்ஜூமாவும் வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை பிடித்த சகோ.தாஹிருக்கு 100 ரியால் மதிப்புள்ள பரிசும் குர்ஆன் தர்ஜூமாவும் வழங்கப்பட்டது.
மேலும் பங்கேற்ற பிற சகோதரர்களுக்கு ஊக்கப் பரிசுகளாக புத்தகங்கள் மற்றும் டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
புதிய பேச்சளர்களை உருவாக்கும் புதியதொரு களமாக இது அமைந்தது. இது ரியாத் மண்டலம் நடத்தும் 3வது பேச்சுப் போட்டியாகும்.
No comments:
Post a Comment