அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் & தம்மாம் மண்டலங்களின் மனித நேய உதவி 28-09-2011

வேலூரைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபர் சகோ. ஆஸிம் அஹமது பாஷா. சவூதிக்கு வேலைக்கு வந்த இந்த சகோதரர், வேலைக்கு எடுத்த சவூதி முதலாளியால் கொடுமைப்படுத்தப்பட்டு அவதிக்கு உள்ளானார். சரியான முறையில் சம்பளமும் கிடைக்காமல் கடுமையான சிரமத்தில் இருந்த இந்த சகோதரர் கடந்த இரமலானில் ரியாத் TNTJ மர்கஸை அணுகினார். அவருக்கு, உணவுக்கும், போக்குவரத்து செலவுக்கும், சுமார் ரூ 2500 மதிப்பிலான சவூதி ரியால் கொடுத்து உதவப்பட்டது. மேலும், தனது பாஸ்போர்ட்டில் எக்ஸிட் விசா பெறும் பட்சத்தில் அவருக்கு, சென்னை செல்வதற்கான டிக்கட் எடுத்துத் தரப்படும் என வாக்களிப்பட்டிருந்தது.

கடந்த ஒரு மாத காலமாக கஷ்டப்பட்டு வந்த இந்த சகோதருக்கு, தம்மாம் மண்டலம் சார்பாகவும் சுமார் ரூ 4500 மதிப்பிலான சவூதி ரியால் வழங்கப்பட்டு, அவ்வப்போது ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. இதன் விளைவாக அல்லாஹ்வின் கிருபையால் அவருக்கு தாயகம் செல்ல அந்த நிறுவனம் ஒத்துக் கொண்டது. 

இறுதியாக, கடந்த வாரம் அந்த சகோதரர் கடுமையான இன்னல்களுக்கு பிறகு, தாயகம் செல்வதற்கான ஆவணங்களுடன் ரியாத் மண்டலத்தை அணுகினார், அவருக்கு உடனடியாக ஏர் அரேபியா விமானத்தில் கடந்த 28.09.2011 புதனன்று ரியாதிலிருந்து சென்னை செல்வதற்கான ரூ 8300 மதிப்பிலான டிக்கட் எடுத்து தந்து ரியாத் மண்டலம் அனுப்பி வைத்தது. டிக்கட்டினை ரியாத் TNTJ சார்பாக ரியாத் மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் வழங்கினார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.