கடந்த 2011 ரியாத் மண்டல ஃபித்ரா வசூலில் முதலிடம் பெற்ற, ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளையின் மாதாந்தர சிறப்பு பயான் நிகழ்ச்சி, கடந்த 22.09.2011 வியாழன் இரவு நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல பேச்சாளர் கடையநல்லூர் சகோ. அஹமது கபீர் மவுலவி அவர்கள், “நபிகள் நாயகத்தின் நற்பண்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். அதனை அடுத்து, மண்டல – மாநில செயல்பாடுகளை சகோ. ஃபெய்ஸல் விளக்கினார். நமது ஜமாஅத் குறித்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அதனை அடுத்து, கிளைத் தலைவர் சகோ. திருவிடைமருதூர் நூர் அவர்கள், கடந்த ரியாத் மண்டல பொதுக்குழுவில் தொண்டரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், சகோ. நவ்ஷாத் அவர்கள் கிளைத் தலைவராக கிளை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அதனை அடுத்து, கிளைத் தலைவர் சகோ. திருவிடைமருதூர் நூர் அவர்கள், கடந்த ரியாத் மண்டல பொதுக்குழுவில் தொண்டரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், சகோ. நவ்ஷாத் அவர்கள் கிளைத் தலைவராக கிளை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment