ரியாதிலிருந்து சுமார் 300 கிமீ தொலைவிலுள்ள லைலா அல் அஃப்லாஜில் TNTJ ரியாத் மண்டலத்தின் தொலைதூரக் கிளையான அஃப்லாஜ் கிளை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கடந்த 29.09.2011 வியாழன்று இரவு 11.30 மணிக்கு, அஃப்லாஜ் கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல துணைச் செயலாளர் சகோ. சிட்டி பஷீர், தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா, கிளைத் தலைவர் சகோ. சீனி முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டலப் பேச்சாளர் சகோ. ஹபீழ் மவுலவி அவர்கள், சிறப்புரை ஆற்றினார். சத்திய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில், குர்ஆன் பிற மத வேதங்களில் இருந்து வேறுபட்டு, எவ்வாறு சத்திய இஸ்லாத்தினை உண்மைப்படுத்துகிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார்.
அதனை அடுத்து, மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்க சந்தேகங்களை கேட்டு சகோதரர்கள் தெளிவு பெற்றனர். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல், இரத்த தானத்தின் அவசியத்தையும், அதன் வழிமுறைகளையும் விளக்கி, ஜமாஅத் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். நடுநிசி நேரத்திலும், பிற மத சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, சகோ. பி.ஜெ எழுதி, இவ்வருடம் ரியாத் ரப்வா ஜாலியாத்தில் வெளியிடப்பட்ட “வருமுன் உரைத்த இஸ்லாம்” புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்புத்தகங்களை மண்டல துணைச் செயலாளர் சகோ. சிட்டி பஷீர் வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், அனைவருக்கு சிறப்பு இரவு உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment