கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரியாதில் பணிபுரியும் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த சகோ. மரைக்காயர் அலி என்பவர் கடுமையான வாகன விபத்தில் சிக்கி, ரியாத் மலஸில் உள்ள நேஷனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாகனம் முழுமையாக சேதமடைந்தது. அல்லாஹ்வின் அருளால், உயிர் பிழைத்த அவருக்கு கால் மூட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவர்கள் முடிவெடுத்ததன் பேரில், உடனடியாக அவருக்கு 2 யூனிட்டுகள் A+ இரத்தம் தேவைப்பட்டது. ரியாத் மண்டத்தை அணுகிய அவரது உறவினர்கள், இரத்த தான உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
துரிதமாக செயல்பட்ட ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல், கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசியதன் மூலம், இரண்டு யூனிட்டுகள் இரத்த தானம் செய்யப்பட்டு, மரைக்காயர் அலி அனுமதிக்கப்பட்டுள்ள நேஷனல் மருத்துவமனையில் கடந்த 24.08.2011 புதனன்று ஒப்படைக்கப்பட்டது. மேலும், சகோ. ஃபெய்ஸல் மருத்துவமனையில் சகோ. மரைக்காயர் அலியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment