தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் சார்பாக மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 27.07.2012 வெள்ளியன்று மாலை 5.30 மணியளவில், ரியாத் மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் தலைமையிலும் மண்டல நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ.யூனுஸ் அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் அதில் சரியாக பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன, ஃபித்ராவின் அவசியம் பற்றி சகோ.சையது அலி ஃபைஜி அவர்கள் மக்களுக்கு விளக்கினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு இஃப்தார் விருந்து பரிமாறப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
இஃப்தார் நிகழ்ச்சி
மர்கஸ்
ரியாத் மண்டலம்
"இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" - ரியாத் மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி & இஃப்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment