இரமலானில் அனைவருக்கும் வெவ்வேறு சமயங்களில் வேலை நேரங்கள் உள்ளதால், நமது மக்களை கிளை வாரியாக இஃப்தார் நேரத்தில் ஒருங்கிணைக்கும் முகமாக, சிறப்பு சொற்பொழிவு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி ரியாத் மண்டலத்தில் கிளை வாரியாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் கதீம் செனையா கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 26.07.2012 வியாழன் அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. மண்டல செயலாளர் சகோ.ஹாஜா மைதீன் தலைமையிலும் கிளைத் தலைவர் சகோ.நவ்ஷாத் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ.செய்யதலி ஃபைஜி மவுலவி அவர்கள் இரமலான் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் சரியாக பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஃபித்ராவின் அவசியம் பற்றியும் மக்களுக்கு விளக்கப்பட்டது.
மாதந்தோறும் கிளையின் பயான் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வரும் காரைக்காலைச் சேர்ந்த பிற மதச் சகோதரர் மணி அவர்களுக்கு சகோ. பி.ஜெ அவர்களின் தர்ஜுமா குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அத்துடன் அனைவருக்கும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு இஃப்தார் விருந்து பரிமாறப்பட்டது.
No comments:
Post a Comment