ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக, கடந்த 28.06.2012 அன்று இரவு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமை தாங்கினார். மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம், மண்டல செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர், மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர், கிளை பொருளாளர் சகோ. ஷாக்கிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “நோன்பின் சட்டங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நோன்பு, இரவுத் தொழுகை, இரமலான் சம்பந்தமான கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கப்பட்டது. அதனை அடுத்து, இன்ஷா அல்லாஹ், 13.07.2012 அன்று ரியாதில் நடக்க உள்ள இரமலான் உம்ரா பிரயாணிகளுக்கான சிறப்பு இரத்த தான முகாம் குறித்தும், இரத்த தானத்தின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment