அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

19 ஆவது இரத்த தான முகாமில் 253 நபர்கள் இரத்த தானம் செய்தனர்

 
இரமலான் உம்ரா பயணிகளுக்கான சிறப்பு குருதிக்கொடை முகாம்  

சங்கைக்குரிய மாதமான இரமலானை வரவேற்கும் முகமாக, ரியாத் மண்டலத்தின் 19 ஆவது மாபெரும் இரத்த தான முகாம், கடந்த 13.07.2012 வெள்ளியன்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனை இரத்த வங்கியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாம், மாலை 5 மணி வரை நடைபெற்றது.   முஸ்லிமல்லாத சகோதரர்கள், பெண்கள், பிற மாநிலத்தவர், பிற நாட்டவர் உட்பட சுமார் 300 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இம்முகாமில் 253 பேர் இரத்த தானம் செய்தனர்.

இம்முகாமில் பெறப்பட்ட இரத்தம் இவ்வருடம் இரமலான் மாதத்தில் உலகெங்கிலுமிருந்து உம்ரா செய்ய வரும் பயணிகளில் தேவையானோருக்கு வழங்கப்பட உள்ளது. ரியாத் மண்டல மருத்துவ அணி  பொறுப்பாளர்கள் சகோ. மாஹீன், சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் ஆகியோரின் சிறப்பான ஏற்பாட்டில், மண்டலச் செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் அவர்களின் மேற்பார்வையில், மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  

தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கஷ்மீர் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சகோதரர்களும், TNTJ வின் இந்த அழைப்பினை ஏற்று முகாமில் பங்கேற்று குருதிக்கொடை வழங்கினர். மேலும், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் சிரிய நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.   மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.  ஹாஜா அலாவுதீன் மேற்பார்வையில், மண்டல - கிளை நிர்வாகிகள் தமது வாகனங்கள் மூலம் கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கொடையாளிகளை அழைத்து வருவது, அவர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு இரத்த தானத்திற்கான அடிப்படை தகவல்களை தெரிவிப்பது என அனைத்து பணிகளும் செவ்வனே செய்யப்படிருந்தன. தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் அவர்களின் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர்.   இரத்த தானம் செய்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளை நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று, கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வந்திருந்தனர்.   

சவூதி நாட்டைச்  சேர்ந்த இரத்த வங்கி மேற்பார்வையாளர் சகோ. அப்துல் மஜீத் TNTJ வுக்கு நன்றி கூறினார்.   இம்முகாம், ரியாத் TNTJ வின் 19 ஆவது முகாமும், ரியாத் மண்டலம் மூலமாக KFMC யில் நடத்தப்படுகின்ற 17 ஆவது முகாமும் ஆகும். கிங் ஃபெய்ஸல் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில் ஒன்றும், ரியாத் மிலிட்டரி மருத்துவமனையில் ஒன்றும் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.  

கடந்த 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது போன்று, 2012 ஆண்டிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!


 




 







ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.