அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“செயற்குழுக் கூட்டம்”– ரியாத் மண்டலம் 05.12.2014

செயற்குழுக் கூட்டம் ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல செயற்குழுக்கூட்டம் 05.12.2014 வெள்ளியன்று காலை மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில்  நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் கட்டுப்படுதல் என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார். தொடர்ந்து தஃவா பணிகளுக்கான மேம்பாடு குறித்து திட்டங்கள் போடப்பட்டது. கடந்த 30 மற்றும் 32வது (உம்ரா மற்றும் ஹஜ் பயணிகளுக்கான) இரத்ததான முகாம்களில் அதிக எண்ணிக்கையில் கொடையாளிகளை அழைத்து வந்து இரத்ததானம் செய்த கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.  இதில் செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தஃவாவின் நலன் கருதி முன்வைத்தனர். இறுதியாக மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் நிதி நிலையறிக்கை வாசித்து கூட்டம் இனிதே பகல் 11:30 மணிக்கு நிறைவுற்றது.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.