தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் கடந்த 08.06.2012 வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.
கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளை சகோ. ஹாஜா விளக்கினார். கணக்குகளை சகோ. ஃபரீத் விளக்கினார். அதிக அளவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். புதிய கல்வி ஆண்டில் கல்லூரி திறப்பது குறித்தும், கல்லூரி நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் குறித்தும், இந்த வருடத்திற்கான கல்லூரி அட்மிஷன் குறித்தும் பேசப்பட்டன. தாயகத்தின் கல்லூரி செயலாளர் சகோ. சுவாமிமலை ஜாஃபர் தொலைபேசி மூலம் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment