ரியாதிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லைலா அஃப்லாஜ் என்னுமிடத்தில் கடந்த 21-06-2012 வியாழன் அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இரவு 11.45க்கு துவங்கிய இக்கூட்டத்தை கிளை தலைவர் சகோ.சீனி முஹம்மது அவர்கள் துவக்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்து ரியாத் மண்டலத்திலிருந்து சென்றிருந்த மண்டல பேச்சாளர் சகோ.சோழபுரம் அன்சாரி அவர்கள், ‘சிறிய அமல்களும் பெரிய நன்மைகளும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அதை தொடர்ந்து மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், மண்டல மாநில செயல்பாடுகளை விளக்கினார். . நள்ளிரவிலும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
உணவு பரிமாறப்பட்ட பின் இரவு 1.30 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment