அஜீஸியா கிளையில் கடந்த 15-06-2012 அன்று மாதாந்திர மார்க்க விளக்க
கூட்டம் நடைபெற்றது. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துல் (ஷாகுல்) ஹமீது
அவா்கள் கூட்டத்தை துவக்கி வைத்து கிளை செய்திகளை குறிப்பிட்டார். அதை தொடர்ந்து
மண்டல பேச்சாளர் சகோ.யூனுஸ் அவா்கள் “தியாகத்தில் வளா்ந்த இஸ்லாம்“ எனும் தலைப்பில்
உரையாற்றினார்.
அடுத்ததாக மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், தமிழகத்தில் நேற்று (14-06-12) முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்காததை கண்டித்து டி.என்.டி.ஜே நடத்திய போராட்டத்தை பற்றி விளக்கினார்.
இறுதியாக மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பா் அவா்கள் கிளை ஆலோசனைகளையும் மணடல செய்திகளையும் குறிப்பிட கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment