ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 01.06.2012 வெள்ளியன்று காலை 9.00 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத், மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “மார்க்க ஆய்வுகளை பின்பற்றுதல்” என்ற தலைப்பில் சகோ. ஃபெய்ஸல் உரையாற்றினார்.
அதனை அடுத்து, மண்டல செயல்பாடுகளை சகோ. ஹாஜா விளக்கினார். கிளைகளின் செயல்பாடுகள், தஃவா பணிகளை அதிகரித்தல், நோட்டீஸ் விநியோகம் & ஆன்லைன் நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுபினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.
கடந்த 18 ஆவது இரத்த தான முகாமில், முதலிடம் (நியூ செனைய்யா), இரண்டாம் இடங்கள் (ஷிஃபா & நஸீம்) பெற்ற கிளைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஜும்ஆ தொழுகைக்கு முன்னதாக கூட்டம் இனிதே முடிவுற்றது.
No comments:
Post a Comment