தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் செயற்குழுக்கூட்டம் கடந்த 07.10.2011 வெள்ளியன்று காலை ரியாதில் பத்தா TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மவுலவி சையது அலி ஃபைஜி அவர்கள் துவக்க உரையாற்றி கூட்டத்தை துவக்கி வைத்தார். மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் கடந்த மாத செயல்பாடுகளை விளக்கினார்.
எதிர்வரும் 21 ஆம் தேதி நடக்க உள்ள ஹஜ் பயணிகளுக்கான 13 வது இரத்த தான முகாம், குர்பானி விநியோகம், இஸ்லாமியக் கல்வி மற்றும் மாநிலத் தலைமைக்கான பங்களிப்புகள் முதலானவை விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்த 16.09.2011 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
தணிக்கை செய்யப்பட்ட ஃபித்ரா 2011 கணக்குகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் சமர்ப்பித்தார். தணிக்கை செய்யப்பட்ட மாதாந்திர கணக்குகளை மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் சமர்ப்பித்தார். தணிக்கை செய்யப்பட்ட இமயம் டிவி விளம்பர கணக்குகளை சகோ. ஃபெய்ஸல் சமர்ப்பித்தார்.
ரியாத் மண்டலம் நடத்திய 12 ஆவது இரத்த தான முகாமில், மிக அதிகமான கொடையாளிகளை கொண்டு வந்த ஒலையா கிளைக்கு விருது வழங்கப்பட்டது. இதனை மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் ஒலையா கிளைச் செயலாளர் சகோ. அய்யூப் வசம் வழங்கினார்.
மண்டல நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment