அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அல்குர்ஆனை பற்றி பிடிப்போம்" - ரியாத் சுலை பகுதியில் பிரச்சாரம் 18-10-2011

கத்துவ பிரச்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் எனும் நோக்கில் பிரச்சார வியூகங்களை மாற்றி அமைத்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம், ரியாதின் மூலை முடுக்குகளிலும் பிரச்சாரம் சென்றடைய வேண்டும் என்பதில் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. போதிய பிரச்சாரகர்கள் கைவசம் இல்லாவிடினும் சளைக்காமல் அழைப்பு பணி நடைபெற்று வருகின்றது.  அல்ஹம்துலில்லாஹ்...

ரியாத் மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. ஃபாரூக்கின் ஏற்பாட்டில், ரியாதில் உள்ள சுலையில் உள்ள பாலைவனப் பகுதியில் கடந்த 18-10-11 செவ்வாய் அன்று ஒரு புதிய இடத்தில் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு இஷா தொழுகைக்கு பின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்டல பேச்சாளர் மௌலவி ஹஃபீழ் ஸலஃபி அவர்கள், ‘அல்குர்ஆனை பற்றி பிடிப்போம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘முஸ்லிம்கள் இரத்ததானம் செய்வது ஏன்?’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார். இறுதியாக மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல், வெள்ளியன்று ஹாஜிகளுக்காக நடைபெற இருக்கும் இரத்ததான முகாமில் கலந்து கொள்வது பற்றிய விபரங்களை பொறுப்பாளர் சகோ.ஜிப்ரி அவர்களுடன் பகிர்ந்து கொண்ட பின் கூட்டம் நிறைவுற்றது. கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களும் இலங்கை சகோதரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

அனைவருக்கும், சகோ. பிஜெ அவர்கள் எழுதிய “வருமுன் உரைத்த இஸ்லாம்”, “திருமறையின் தோற்றுவாய்” மற்றும் சிங்கள மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.