தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளை
சார்பாக தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 10.02.2012 வெள்ளியன்று
காலை அல்-அந்தலூஸ் பகுதியில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. சலாஹுத்தீன் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் மற்றும் கிளை
துணைச் செயலாளர் சகோ. முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “ தொழுகை செய்முறை
விளக்கம்” குறித்த தர்பியாவினை நடத்தினார். மேலும், தொழுகை குறித்த அனைத்து
கேள்விகளுக்கும் பதில் அளித்தார். தர்பியாவிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு
பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மார்க்க விளக்க CD-க்கள் அன்பளிப்பாக
வழங்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரவ்தா மற்றும்
நஸீம் கிளை உறுப்பினர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment