ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்….
இன்று கடைசி நாள் 29-02-2012
இதுவரை
40 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.
முகாம் நடைபெறும் இடம் :
ஹோட்டல் கிரௌன் பிளாசா,
கிங் அப்துல் அஸீஸ் சாலை,
மலஸ் ஏரியா.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையும் கிரௌன் பிளாசா ஹோட்டலும்
இணைந்து மொபைல் (தொடர்) இரத்த தான முகாமை நடத்தி வருகின்றது. கிங் ஃபஹத் மெடிக்கல்
சிட்டி மருத்துவமனைக்காக நடைபெறும் இம்முகாம் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும்.
இது ரியாத் டி.என்.டி.ஜே நடத்தும் 17 வது இரத்ததான முகாமாகும்.
இரத்த தான பணிகளை பார்வையிட்ட சகோ. முஹம்மது மாஹீன், கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று
வரும் இம்முகாமில் இதுவரை 40 பேர் இரத்ததானம் செய்துள்ளனர் என்றும் காலை 9 மணி முதல்
மதியம் 1 மணி வரை நடைபெறும் இம்முகாம் இன்றுடன் நிறைவடைகின்றது எனவே இரத்ததானம் செய்ய
விருப்பமுள்ளவர்கள் இன்று (29-02-12) வந்து குருதிக் கொடையளிக்கலாம் என்றும்
அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment