அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்" - ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான டிசம்பர் 2012 மாத கூட்டம்

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான,  அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 14.12.2012  வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.

மண்டல பொருளாளர் சகோ.ஃபரீத் அவர்கள் "நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளையும் பொறுப்பாளர் சகோ.நிஜாம் விளக்கினார். கல்லூரி பட்டமளிப்பு விழா, மாணவிகள் ஸ்பான்ஸர், உதவித் தொகைகள் குறித்து கருத்துக்களும், ஆலோசனைகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கணக்குகளை சகோ. ஃபரீத் விளக்கினார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.