ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 06.01.2012 வெள்ளியன்று
காலை 8.45 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல்
தலைமை தாங்கினார். மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள்
மார்க்க விளக்க உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். “நிர்வாகிகளுக்கு
இருக்க வேண்டிய பண்புகள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை நிகழ்ச்சிக்கு பொருத்தமாக
அமைந்தது.
மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் (எ) அபு செயல்பாடுகளை
விளக்கினார். மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விபரங்களை
விளக்கினார். மேலும் கணக்குகள், புள்ளிகள் பட்டியல் அனைத்தும் கணிணி
மயமாக்கப்பட்ட தகவலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. குர்ஆன் ஓத பயிற்சி மற்றும் இன்ன
பிற தஃவா பணிகள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. அனைத்து அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், செயற்குழு
உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பிறகு கூட்டம் துஆவுடன்
நிறைவுற்றது.
No comments:
Post a Comment