“அழைப்பு பணியின் அவசியம்” – சித்தீன் கிளை (ETAபுதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் சித்தீன் கிளை நிர்வாகிகளின் சீரிய முயற்சியாலும் ரியாத் மண்டல நிர்வாகிகளின் ஆலோசணையின்படி அக்கீக் Exit 2 பகுதியில் மேலும் ஒரு புதிய கேம்ப் 08.02.2015 ஞாயிற்றுக்கிழமையன்று இஷாவிற்கு பிறகு ETA கேம்ப் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. சித்தீன் கிளைத் தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் கிளை துணைச் செயலாளார் சகோ. ஹனீஃபா துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் , “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள், அதன் நிலைபாடு மற்றும் பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு தொடர்ந்து பயான் நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டது. புகழ் அனைத்தும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment