அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 28-10-2011

ரியாத் மண்டல நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின்  நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் கடந்த 28.10.2011 வெள்ளியன்று காலை 7.30  மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் செயல்பாடுகளை விளக்கினார். மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் மற்றும் மண்டல துணைச் செயலாளர் சகோ,. நூருல் அமீன் ஆகியோர் கணக்கு விபரங்களை விளக்கினர்.  மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் அவர்கள் நிர்வாக ஒழுங்குகளை விளக்கினார்.

நடந்து முடிந்த 13 மற்றும் 14 ஆவது ரியாத் மண்டல இரத்த தான முகாம்களுக்குப்பிறகு ரியாத் மண்டலம் இரத்த தானத்தில் முதலிடம் வகிக்கும் செய்தி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. விரைவில் இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை மாதமாக அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதத்தில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க திட்டங்கள் தீட்டப்பட்டன. இமயம் டிவி நிகழ்ச்சி குறித்தும், வளைகுடாவில் நிகழ்ச்சி தெரிவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

ஜும்ஆ தொழுகைக்கான இடைவேளைக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியது. கிளைகள் மற்றும் வெளிநாட்டு மண்டலங்களுக்கு மாநிலத் தலைமை வழங்க உள்ள செயல்பாடுகளுக்கான புள்ளிகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.  மண்டல மருத்துவ அணிச் செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம் குறித்து விளக்கினார். தஃவா அணிச் செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் கிளைகளில் பயான் நிகழ்ச்சிகள் மற்றும் தஃவா நிகழ்ச்சிகள் குறித்து கூடுதல் ஆலோசனைகளை வழங்கினார்.

அனைத்து அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பிறகு கூட்டம் துஆவுடன் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.