அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பு மாதாந்திர கூட்டம் 08-10-2011

ல்லாஹ்வின் பேரருளால் கடந்த 08-10-2011 அன்று காலை 9-30 மணிக்கு TNTJ ரியாத் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் சகோதரர் காஜா தலைமையில் நடைபெற்றது. தற்பொழுது பொருளாளர் பொறுப்பில் உள்ள சகோதரர் முகமது அலி வரவு செலவு கணக்கை வாசித்தார்.  செயலாளர்  சகோதரர் சாகுல் மாவட்ட செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். அதனைத் தொடர்ந்து ரியாத் மண்டல செயலாளர் சகோதரர் அரசூர் ஃபாருக் உரை நிகழ்த்தினார். அதன் பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழுவின் பொருப்பாளர்களாக இராஜகம்பீரம் காஜா, காரைக்குடி சாகுல், இராஜகம்பீரம் முஹமது அலி, தேவகோட்டை மூசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேலும் எதிர்வரும் கூட்டத்தில் [12-11-2011] தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ரியாத் ஒருங்கிணைப்பு குழுவில் [பொறுப்பு] நிர்வாக சீரமைப்பு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.