அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இறைமறையின் முறையமைவு" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 28-10-2011


ரியாத் மண்டல மர்கஸில் கடந்த 28.10.2011 வெள்ளியன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜுபைல் பகுதியின்  புறநகர் பகுதியிலிருந்து வருகை தந்திருந்த சகோ. J. அப்துல் கஃபூர் அவர்கள் “இறைமறையின் முறையமைவு” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார். குர்ஆனின் சிறப்புகளைப் பற்றி ஆய்வு செய்யாமல், எண்ணிக்கையை வைத்து விளையாடும் 19 கூட்டத்தினருக்கு பதிலடியாக இந்த உரை விளங்கியது. குர்ஆனின் முறையமைவு அதன் அற்புதமான செய்திகளே! எண்கள் அல்ல; என்பதை ஆதாரத்துடன் விளக்கினார். மேலும், சகோதரர்கள் ஆர்வத்துடன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முன்னதாக மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் துல்ஹஜ் முதல் 10 நாட்களின் சிறப்பை விளக்கினார். நிகழ்ச்சியின் இறுதியில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் மாநில-மண்டல செயல்பாடுகளை விளக்கினார்.

அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.