ஏகத்துவ பிரச்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் எனும் நோக்கில், ரியாதின் மூலை முடுக்குகளிலும் பிரச்சாரம் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில், ரியாத் சுமைசி பகுதிக்கு அருகில் உள்ள அரேபியன் கல்ஃப் கேம்பில் பிரச்சார நிகழ்ச்சியை ரியாத் மண்டலம் நடத்தியது.
ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை நிர்வாகி சகோ. மதுரை முபாரக் அவர்களின் ஏற்பாட்டில், ரியாதில் உள்ள சுமைசிக்கு அருகில் உள்ள பகுதியில் 23-11-11 புதன் அன்று ஒரு புதிய இடத்தில் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு இஷா தொழுகைக்கு பின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்டல பேச்சாளர் பஷீர் மவுலவி அவர்கள், ‘ஒழுக்கம் விழுப்பம் தரும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அரேபியன் கல்ஃப் பொறுப்பாளர் சகோ. ஹஸன் காதர் முன்னிலை வகித்தார்.
இஸ்லாமிய அடிப்படையிலான ஒழுக்க வாழ்வே இம்மையிலும், மறுமையிலும் சிறப்புகளைப் பெற்றுத் தரும்; கடல் கடந்து வந்து கடுமையான பணிகளை குறைந்த சம்பளத்திற்கு செய்து வரும் நாம், இஸ்லாமிய ஒழுங்குகளை பின்பற்ற வேண்டும்; ஐவேளைத் தொழுகைகளை கைக்கொள்ள வேண்டும்; தாய்லாந்து லாட்டரி, குடி, சூது, சினிமா போன்றவற்றிலிருந்து விலகி, சம்பளத்தை சேமித்து நல்ல நிலையில் நாடு திரும்ப வேண்டும் என்ற அடிப்படையில் கலந்துரையாடல் போன்ற விளக்க உரையை சகோ. பஷீர் மவுலவி நிகழ்த்தினார்.
அதனை அடுத்து, கலந்து கொண்ட புதிய சகோதரர்களுக்கு மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், TNTJ வின் பணிகளை விளக்கி சிற்றுரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு பஷீர் மவுலவி அவர்கள் பதிலளித்தார். அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment