கடந்த 18-11-2011 வெள்ளிக்கிழமையன்று பத்தாஹ் கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை சிற்றுண்டியுடன் ஜும்ஆவுக்கு முன்னர் நடந்த இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய கிளைத்தலைவர் சகோ. ஜியாவுதீன், பத்தாஹ் கிளை செய்து வரும் பணிகளை குறிப்பிட்டார்.
அடுத்ததாக சகோ. முஹம்மது மாஹீன், ‘நம்மை நாம் அறிவோம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். ‘அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நாம் முதலில் யார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நம்மை ஒவ்வொருவரும் உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே நம்முடைய செயல்களில் தூய்மையும் வாய்மையும் வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார்.
அடுத்ததாக மண்டல துணை செயலாளர் சகோ.அமீன், மண்டல, மாநில செய்திகளை எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment