ரியாத் மண்டல மர்கஸில் கடந்த 04.11.2011 வெள்ளியன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள் “சொர்க்கத்தின் வாசற்படி” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார். சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்கக்கூடிய அமல்களைப் பற்றியும், சொர்க்கத்தின் சிறப்புகளைப் பற்றியும் கணீர்க்குரலில் சிறப்புரை அமைந்திருந்தது.
முன்னதாக மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் துவக்க உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில், மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் மாநில-மண்டல செயல்பாடுகளை விளக்கினார்.
அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment