ரியாத் மண்டலத்தின் ஒலையா கிளையில் கடந்த 09-11-2011
இரவு 8 மணியளவில் மாதாந்திர கிளைக்கூட்டம் மற்றும் உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி
நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. அய்யூப் கூட்டத்தை துவக்கி
வைத்தார். மண்டலப் பேச்சாளர் செய்யதலி ஃபைஜி அவர்கள் ‘தனி நபர் வழிபாட்டை தரைமட்டமாக்குவோம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இபுறாஹீம் நபி, அல்லாஹ் ஒருவனுக்கே வழிபட்டு நம்பிக்கை கொண்டது போல் நாமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக விவரித்தார்.
அதைத்தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ.சிட்டி பஷீர் மண்டல மாநில செய்திகளை
எடுத்துரைத்தார். கிளைச் சகோதரர்கள் முன்னிலை வகிக்க, சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment