அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாதில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு மாதாந்திர கூட்டம் 18-11-2011

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு, ரியாதின் மாதாந்திர கூட்டம் கடந்த 18.11.2011 அன்று, மாலை 4.00 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் அதன் பொறுப்பாளர் சகோ.சாகுல் [அப்துல்] ஹமித் தலைமையில் துவங்கியது.

‘மறுமைக்காக சேமிப்போம்’ என்ற தலைப்பில் சகோ. ஃபாரூக் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்திலிருந்து வந்திருந்த செய்திகள் மற்றும் கடிதங்கள் வாசிக்கப்பட்டு மாவட்ட வளர்ச்சி குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது. தாயகத்திற்கு பல சகோதரர்கள் விடுமுறையில் சென்றுள்ளதால் மீதமுள்ள இரண்டு பொறுப்பாளர்கள் வரும் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இரவு 7.00 மணிக்கு கூட்டம் துஆவுடன் நிறைவடைந்தது. இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

பொறுப்பாளர் தேர்வு

முன்னதாக கடந்த 23.09.2011 அன்று அப்போதைய செயலாளர் ஃபரீத் தலைமையில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் தலைமையின் வழிகாட்டுதலின்பேரில் (மாவட்ட கூட்டமைப்புகளுக்கு பொறுப்பாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு) அமைப்பின் பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது. தலைவராக செயல்பட்ட மயிலாடுதுறை சாகுல், மண்டல செயலாளர் அரசூர் பாரூக் முன்னிலையில் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.