அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

''வளைகுடா வாழ்க்கை சுகமா? சோகமா?" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி


ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக கிளைத் தலைவர் சகோதரர் நவ்ஷாத் தலைமையிலும், கிளை பொருளாளர் சகோ. ஷாக்கிர், மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர் மற்றும் மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.சிராஜ், முன்னிலையில், குடும்பத்தினருக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 16.05.2012 புதனன்று இரவு "கதீம் செனைய்யா இந்தியன் பில்டிங்" -இல் நடைபெற்றது.

சகோ.நவ்ஸாத் அவர்கள் முதலில் உரையாற்றி துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து மண்டலம் சார்பாக மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன், ''வளைகுடா வாழ்க்கை சுகமா? சோகமா?'' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வளைகுடாவிற்கு வருபவர்களின் சிரமங்களையும் குடும்பமாக வசிப்பவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் விவரித்த அவர், வளைகுடா வாழ்வை சுகமாக்க இஸ்லாம் கற்று தருவதென்ன! என்பதையும் விளக்கி கூறினார்.

இறுதியாக சகோ.ஃபெய்ஸல் அவர்கள், 'தவ்ஹீத் ஜமாஅத் செய்வதென்ன?' எனும் தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளை விவரித்து சிற்றுரையாற்றினார். ஆண்கள் / பெண்கள் / குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  “தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்“ தலைப்பில்  20 புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.