அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அன்பு!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 25.05.2012

டந்த 25-05-2012 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. சகோ.முஹம்மது மாஹீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கேள்வி-பதில் நிகழ்ச்சியை நடத்தினார். அடுத்ததாக பயிற்சி பேச்சாளராக சகோ.நைனா முஹம்மது அவர்கள், ‘நன்மைகளை செய்யவும் தீமைகளை தவிர்க்கவும் வேண்டுமா?’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ.அன்சாரி அவர்கள் ‘அன்பு’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், நண்பனை விட, குழந்தைகளை விட, கணவனை விட, மனைவியை விட, தாயை விட அல்லாஹ் நம்மீது அதிகமாக அன்பு செலுத்துகிறான். அவனது கருணைக்கும் அன்புக்கும் ஈடு இணையே கிடையாது என்று குறிப்பிட்டார்.

இறுதியாக கூத்தாநல்லூர் மாநாடு, கிறிஸ்தவ விவாதம் போன்ற தமிழக செய்திகளை எடுத்துரைத்த மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் அவர்கள், ரியாத் மண்டல செய்திகளையும் எடுத்துரைத்த பின் கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.