அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"எப்படி கிடைத்தது இஸ்லாம்?" - அஜீஸியா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு


ஜீஸியா கிளையில் கடந்த 18-05-2012 வெள்ளி அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.ஷாகுல்(அப்துல்)ஹமீது அவர்கள் துவக்கவுரையாற்றினார். அதை தொடர்ந்து மண்டல மருத்துவ அணிச் செயலாலர் சகோ.முஹம்மது மாஹீன், ‘எப்படி கிடைத்தது இஸ்லாம்?’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்து விட்டதால் இன்று நாம் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்கிறோம். இந்த இஸ்லாத்தை பெறுவதற்காக நாம் எந்த விதமான போராட்டங்களோ தியாகங்களோ செய்திடவில்லை.  ஆனால் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று சொன்னதற்காக  பல ஸஹாபாக்கள் கொல்லப்பட்டதையும் இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் பிற ஸஹாபாக்களும் பட்ட துயரங்களையும் எடுத்துச் சொன்ன அவர், அதுபோன்ற எந்த சிரமங்களையும் நாம் படாததால் தான் இஸ்லாத்தின் மகத்துவத்தை நாம் அறியாமல் இருக்கின்றோம் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இறுதியாக மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் அவர்கள், மண்டல மற்றும் மாநில செய்திகளை குறிப்பிட்டார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.