அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாம் ஏன் துறவறத்தை ஆதரிக்க வில்லை” நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் கடந்த 18-05-2012 (வெள்ளி) அன்று  மாலை 4.30 மணிக்கு ரியாத் மண்டல TNTJ மர்கஸில் நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம், அதன் பொறுப்பாளர் சகோ. சாகுல் (அப்துல்) ஹமீது தலைமையிலும் துணை பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் துவங்கியது.

“இஸ்லாம் ஏன் துறவறத்தை ஆதரிக்க வில்லை” என்ற தலைப்பில் சகோ.ஃபரீத் உரையாற்றினார். அவர் தனது உரையில் ஆசைகளை துறந்து ஒருபோதும் மனிதனால் இருக்க இயலாது என்பதையும், மனிதன் தன்னை வருத்திக்கொண்டு இறைவனை அடைய இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை என்பதையும் நபிமொழிகள் மூலம் ஆதாரத்துடன் விளக்கினார். மேலும் தங்களை துறவிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஆசாமிகள் எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகின்றனர் எப்படி எல்லாம் மக்களின் முன்னர் தங்களது செயல்களால் இழிவடைந்து நிற்கின்றனர் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கினார்.

அதைத்தொடர்ந்து மாவட்டத்திலிருந்து வந்திருந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டு மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு இக்கூட்டம் துவாவுடன் இனிதே நிறைவுற்றது, இதில் மாவட்ட சகோதரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

எல்லாப் புகழும் அல்லஹ்வுக்கே.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.