ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 04.05.2012 வெள்ளியன்று காலை 9.00 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் “பொறுமையின் இன்றியமையாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ரியாத் மண்டலத்தில் நடந்து முடிந்த 18 ஆவது இரத்த தான முகாம் குறித்தும், பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மாநிலத்தில் நடைபெற்று வரும் தாயி பயிற்சி முகாமில் பயிலும் 90 மாணவர்களுக்கும், தர்ஜுமா குர்ஆன் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. மண்டல செயலாளராக சகோ. ஹாஜா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு, நோட்டீஸ் விநியோகம், புத்தகங்கள் விநியோகம் முதலானவை பேசப்பட்டன.
No comments:
Post a Comment