ரியாத் மர்கஸில் 04-05-2012 அன்று இரவு இஷா தொழுகைக்கு பின் வாராந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த சகோ.முஹம்மது மாஹீன், ‘பார்வை ஓர் அருட்கொடை’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பார்வையற்றோர் படும் இன்னல்களை சுட்டிக்காட்டிய அவர் இறைவன் நமக்கு தந்திருக்கும் பொக்கிஷமான பார்வையை கொண்டு அவன் தடுத்ததை விட்டும் நமது பார்வையை விலக்கி இருந்து அவன் ஹலாலாக்கியதை மட்டும் பார்ப்போமானால் அதுவே அவனுக்கு நாம் செய்யும் வழிபாடாக மாறிவிடும் என்று குறிப்பிட்டார்.
அடுத்ததாக மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் அவர்கள், ரியாத் மண்டல செய்திகளையும் சமீபத்தில் நடந்து முடிந்த கிறிஸ்தவ விவாதம் பற்றியும் எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment