ரியாத் மண்டலத்திற்குட்பட்ட அல்கர்ஜ் ஸஹானா கிளையில் கடந்த 11-05-2012 அன்று ஜும்மா தொழுகைக்கு பின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. அப்துல் ஸலாம் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து மண்டலம் சார்பாக சகோ. முஹம்மது மாஹீன், 'இறைவனின் கருணை' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கருணையாளனாகிய இறைவன் நமக்கு அளித்திருக்கும் பாக்கியங்களான உடல் உறுப்புக்களுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவதோடு அவற்றை அவன் ஹலாலாக்கிய விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அடுத்ததாக ஸஹானா கிளையிலிருந்து சகோ.முஹம்மது சேக் அவர்கள், நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு ஸலவாத்து சொல்லுவதற்கான முக்கியத்துவம் பற்றி விவரித்தார். இறுதியாக கிளை மேம்பாட்டிற்காக ஆலோசனைகளும் உணவும் பறிமாறப்பட்டன.
No comments:
Post a Comment