ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளை சார்பாக, மாரத் பகுதியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி, கடந்த 14.02.2013 வியாழன்று இரவு 10.30 மணிக்கு, மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் “அடிப்படை கொள்கை” என்ற தலைப்பில் சிற்றுரையாற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள் “அல்லாஹ் நாடியவருக்கே நேர்வழி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல், மண்டல மாநில செய்திகளை விளக்கினார்.
மேலும், நஸீம் கிளை சார்பாக “மென்மையே நன்மை” என்ற தலைப்பிலும், “அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு அவசர எண்கள்” என்ற தலைப்பிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment