ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை சார்பாக மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 08.02.2013 வெள்ளியன்று மதியம் ஷிஃபா செனைய்யா பகுதியில் நடைபெற்றது. கிளை நிர்வாகி சகோ. பீர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், தற்கால தமிழக முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் நிகழ்கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார். மண்டல அணிச் செயலாளர் சகோ. யூனுஸ் அவர்கள் மண்டல மாநில செய்திகளை விளக்கினார்.
மேலும், ஷிஃபா கிளை சார்பாக ஷிஃபா பகுதி முழுவதும், “மென்மையே நன்மை” என்ற தலைப்பிலும், “அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு அவசர எண்கள்” என்ற தலைப்பிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment