ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 08.02.2013 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம், மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
“அழகிய அழைப்புப் பணி” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் சிறப்புரையாற்றினார். கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. அதிகரிக்கப்பட்ட செயல்பாடுகளை எவ்வாறு தொடர்ந்து தொடர்வது என்பது குறித்தும், தர்பியா, கட்டட நிதி, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், உம்ரா பயணம் முதலான செயல்பாடுகள் ஆலோசிக்கப்பட்டன.
ரியாத் மண்டலம் மற்றும் இதர செயல்பாடுகளை சகோ. ஃபெய்ஸல் விளக்கினார்.
No comments:
Post a Comment