அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் – ஃபிப்ரவரி 2013

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் கடந்த 15.02.2013 வெள்ளியன்று 11.30 மணி முதல் 4  மணி  வரை,  ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது.  பொறுப்பாளர் சகோ. சலாஹூத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சகோ. நிஜாம், சகோ. அமீர்தீன் ஆகியோர் செயல்பாடுகளை விளக்கி பேசினர்.

தாயகத்திலிருந்து தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சகோ. வரிசை முஹம்மது "சமுதாயப் பணிகள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரையாற்றினார். மாவட்ட தலைவர் சகோ. இம்தியாஸ், செயல்பாடுகளை விளக்கினார். மேலும், கட்டட பணிகளும் ஆன்லைன் மூலம் காட்டப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில், மண்டல பேச்சாளர் சகோ. உபயதுல்லாஹ் மவுலவி அவர்கள், "மாவட்ட பணிகள் மறுமை வெற்றிக்கே!" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிக அளவில் ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.