அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்துவம்!” – அஜீசியா கிளை பொதுக்குழு நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் அஜீசியா கிளை பொதுக்குழு & பயான் நிகழ்ச்சி, கடந்த 15.02.2013 வெள்ளியன்று மதியம் அஜீசியா பகுதியில் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. பெரியபட்டணம் சாகுல் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சகோ. ஃபெய்ஸல் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்துவம்  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல வர்த்தக அணிச் செயலாளர் சகோ. அக்பர் விளக்கினார்.

அதனை அடுத்து, கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கீழ்க்கண்டவர் நிர்வாகிகளாக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிளைத் தலைவர்: சகோ. ஓட்டை இஸ்மாயில், கடையநல்லூர்
கிளை செயலாளர்: சகோ. மதுரை சாகுல் ஹமீது, தஞ்சை
கிளை பொருளாளர்: சகோ. எஸ். முஹம்மது ரஃபீக், தஞ்சை
துணைத் தலைவர்: சகோ. நைனா முஹம்மது, தொண்டி
துணைச் செயலாளர்கள்: சகோ. எம். மக்பூல் பாஷா, பவுஞ்சிப்பட்டு
சகோ. காஜா மைதீன், இலங்காங்குறிச்சி
சகோ. அஜீஸ் பாஷா, செஞ்சி

மேலும், அஜீசியா கிளை சார்பாக அஜீசியா பகுதி முழுவதும், மென்மையே நன்மை என்ற தலைப்பிலும், அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு அவசர எண்கள் என்ற தலைப்பிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.