ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளை சார்பாக, ஜரீர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 22.01.2013 செவ்வாயன்று இஷா தொழுகைக்குப் பிறகு, மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமையிலும், கிளைச் செயலாளர் சகோ. ஹாஜா முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “முஸ்லிம்களின் பண்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ரியாத் மண்டலத்தின் ஹஜ் சிறப்பு 21 ஆவது இரத்த தான முகாமில் அதிக எண்ணிக்கையில் கொடையாளிகளை அழைத்து வந்து முதலிடம் பெற்ற மலஸ் கிளைக்கு ரியாத் சார்பாக விருது வழங்கப்பட்டது. கிளை நிர்வாகி இளையாங்குடி ஜாஹிர் அதனை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியாக மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள், “மண்டல – மாநில” செய்திகளை விளக்கினார்.
No comments:
Post a Comment