கடந்த 16-02-2013 அன்று இரவு 8 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து காதலர் தினத்தின் அனாச்சாரங்களை குறித்து சிற்றுரையாற்றினார்.
அதை தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ், ‘நபிகள் நாயகம் உருவாக்கிய சமுதாயம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக, மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் விவரித்தார்.
முன்னதாக, பயிற்சி பேச்சாளர் வரிசையில் குறிச்சிமலை ஹாஜா மைதீன் “இஸ்லாத்தில் பெண்ணுரிமை” என்ற தலைப்பில் பேசினார்.
கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment