அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - லைலா அல் அஃப்லாஜ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த (28.07.2011) வியாழன் அன்று இரவு 11:45 மணியளவில், ரியாதிலிருந்து 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லைலா அஃப்லாஜ் கிளைக் கூட்டம் கிளைப் பொறுப்பாளர்களின் சிறப்பான ஏற்பாட்டில் துவங்கியது.

இதில் ரியாத் மண்டல அழைப்பாளர் செய்யது அலி பைஜி அவர்கள் “ரமளானை வரவேற்போம்” என்ற தலைப்பில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதராங்களோடு உரையாற்றினார்கள்.

அவரது உரையில், மனித சமுதாயத்திற்கு நேர்வழிகாட்ட குர்ஆன் இறக்கியருளிய மாதம் என்பதால் இப் புனித மிகு மாதத்தின் பயனை நாம் எப்படியும் அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில், அல்லாஹ் நமக்கு ஏனைய மாதங்களில் ஆகுமாக்கப்பட்டதைக் கூட அகனது கட்டளையை ஏற்று, நாம் பசித்திருந்தாலும் தாகித்திருந்தாலும் நோன்புடைய வேளையில் உண்ணாது பருகாது இல்லறத்தில் ஈடுபடாது பேணுதலாக இருந்து அம்மாதத்தை அடைய முற்படுகிறோம். அதுபோலவே அல்லாஹ்வின் அச்சத்தை உள்ளத்தில் இறுத்தி தீய செயல்களை விட்டும் தூரமாகி, நல்லறங்களால் தன்னையும் தன் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டதன் நோக்கத்தை உணந்து மறுமையை இலக்காகக் கொண்டு வாழும் பயிற்சியை சங்கைமிக்க இந்த ரமளானிலிருந்தே தொடங்கி  பிற மாதங்களிலும் கடைப்பிடித்து வாழ ஒவ்வொருவரும் சங்கல்பம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இதில் மண்டல நிர்வாகிகள் ஃபெய்ஸல் மற்றும் நூருல் அமீன் கலந்து கொண்டார்கள். ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் மெகா டி.வி.யில் TNTJ நடத்தவிருக்கின்ற சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி, ஃபித்ரா விழிப்புணர்வு, மண்டல மற்றும் மாநில செய்திகளை எடுத்துரைத்தார்கள்.

இத்துடன் இக்கூட்டம் இரவு உணவுடன் 1 மணிக்கு இனிதே நிறைவுற்றது. நடுநிசியிலும் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.