அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - ஷிஃபா கிளையில் ரமலான் நிகழ்ச்சி


ரியாத் மண்டலத்தின் பெரிய கிளைகளில் ஒன்றான ஷிஃபா கிளையில் மார்க்க விளக்கச் சொற்பொழிவு கடந்த 12.08.2011  வெள்ளியன்று  மாலை 5 மணிக்கு ஷிஃபா செனைய்யா பகுதியில்  நடைபெற்றது. கிளைத்தலைவர் சகோ. ஜியாவுதீன் தலைமையிலும், மண்டல நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டலப் பேச்சாளர் கடையநல்லூர் சகோ. அஹமது கபீர் அவர்கள், "இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்ற தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

முன்னதாக மண்டல துணைச் செயலாளர் சகோ. அலி அவர்கள் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் கிளை சார்பிலும், மண்டலம் சார்பிலும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் மஃக்ரிப் அதானுக்கு பிறகு, அனைவருக்கும் இஃப்தார் விருந்து பரிமாறப்பட்டது. சுமார் 130க்கு மேற்பட்ட சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கிளை நிர்வாகிகள் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.